டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மவுன படத்திலும், பேசும் படத்திலும் மகத்தான சாதனைகள் படைத்தவரா ஒய்.வி.ராவ் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆந்திராவில் பிறந்த அவர் சினிமா ஆசையில் சென்னை வந்தார். அது மவுன படங்களின் காலம். படம் இயக்க வந்தவரை 1920ம் ஆண்டு ரகுபதி பிரகாஷ் என்ற மவுனப் படத் தயாரிப்பாளர் நடிகராக்கினார். கருட கர்வ பங்கம் என்ற மவுனப்படத்தில் ஹீரோவாக நடித்தார். மவுன படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ராஜம் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஜோடியாக பல மவுன படங்களில் நடித்தார்கள். என்.டி.ராமராவுக்கு முன்பு கிருஷ்ணர் வேடத்திற்கு பொருத்தமான நடிகராக வலம் வந்தார்.
பாண்டவ நிர்வாணம், பாண்டவ அஞ்சான வாசம், ஹரிமாயா போன்ற மவுன படங்களை இயக்கினார். சென்னையிலிருந்து மும்பை சென்ற ராவ் அங்கு மீரா என்ற மவுன படத்தில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராக, இயக்குனராக, விநியோகஸ்தராக, எடிட்டராக பணியாற்றினார்.
1937ம் ஆண்டு பேசும் படம் வந்த பிறகு இவர் இயக்கிய படம்தான் சிந்தாமணி. தியாகராஜ பாகவதர் நடித்த இந்தப் படம் சென்னையிலும், மதுரையிலும் ஒரு வருடத்தை கடந்து ஓடியது. இதனால் புகழ்பெற்ற ராவ் பாமா பரிணயம், பக்த மீரா, சுவர்ணலதா போன்ற பேசும் படங்களை இயக்கினார். சாவித்ரி, மஞ்சரி, மானவதி, பாக்ய சக்கரம், கிருஷ்ண காருடி படங்கள் இவரது வெற்றி மகுடங்கள். தியாகராஜ பாகவதர், டி.பி.ராஜலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, காஞ்சன மாலா, அசுவத்தம்மா போன்ற அந்தக் கால நடிகர் நடிகைகள் இவர் இயக்கத்தில் நடித்துதான் புகழ் பெற்றார்கள்.
நடிகை குமாரி ருக்மணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஒய்.வி.ராவுக்கும், குமாரி ருக்மணிக்கும் பிறந்தவர்தான் நடிகை லட்சுமி.