டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்தவர் பாத்திமா பாபு. செய்தி எப்படி இருந்தாலும் இவர் முகத்தை பார்ப்பதற்கென்றே அன்று செய்தியை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பும், செய்திக்கேற்ற புருவ அசையும் பாத்திமாவின் தனித்தன்மை. அவரைப் பற்றி அப்போது பரபரப்பாக வதந்தி கிளம்பி பின்னர் அடங்கும்.
ஒரு காலத்தில் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றவர் பின்னர் நடித்தார். தற்போது செய்தி வாசிப்பிலிருந்தும், நடிப்பிலிருந்தும் விலகி இருக்கும் பாத்திமா பாபு. அ.தி.மு.கவில் இணைந்து அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
தற்போது செய்தி சேனல்கள் பெருகிவிட்டது. புதிது புதிதாக செய்தி வாசிப்பாளர்கள் வந்து விட்டார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி ஸ்டைலுடன் செய்தி வாசிக்கிறார்கள். இந்த இளம் செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து கொடுத்து கவுரவிக்க விரும்பிய பாத்திமா பாபு, அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார். அப்போது தனது செய்தி வாசிப்பு அனுபங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் அனைத்து செய்தி சேனல்களையும் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.