தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபாலிக்கு பிறகு தன்ஷிகா நடித்து வரும் படம் ராணி. இதில் விஜயகாந்த் பாணியில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படத்தில் ஒரு கொலை வழக்கு விசாரணைக்காக மலேசியா செல்லும் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மலேசியாவில் அவருக்கு நடக்கும் சம்பவங்களே திரைக்கதை. சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒரே கட்டமாக மலேசியாவில் நடந்தது. பெரும்பாலான படப்பிடிப்புகள் இரவு நேரத்தில்தான் நடந்தது. தன்ஷிகா தான் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வரவும், படப்பிடிப்பு தளத்திலிருந்து திரும்பிச் செல்லவும் தயாரிப்பு தரப்பிலிருந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொடுத்திருந்தார்கள்.
கேமரான் ஐலேண்ட் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு கிளம்ப காரை தேடியுள்ளார். அப்போது காரின் டிரைவர் பதறியபடி ஓடிவந்து காரை யாரோ கடத்தி சென்று விட்டார்கள் என்று கூறியிருக்கிறார். பதறிப்போன தன்ஷிகா தயாரிப்பாளரிடம் சொல்ல அவர் ஐலேண்ட் போலீசில் புகார் அளித்துள்ளார். தன்ஷிகா அதன் பிறகு வேறு காரை பயன்படுத்தினார். கடத்தப்பட்ட கார் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.