தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்துக்கு இசையமைத்து இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றவர் ஏ.ஆர்.ரகுமான். அப்போது விருது வழங்கும் விழாவில் விரு தினை வாங்கியதும், எல்லா புகழும் இறைவனுக்கே -என்று அவர் தமிழில் பேசி பலரையும் கவர்ந்தார். அதுவே ரகுமானின் தமிழ் மொழிப்பற்றுக்கு ஒரு சான்றாக அமைந்தது. தமிழ் ஆர்வலர்கள் பலரும் அவரை பெருமையாக பேசினர்.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டிலுள்ள யோகா போடியோ என்ற அமைப்பு ஏ.ஆர்.ரகுமானுக்கு புகுவோகா -என்றொரு விருதினை சமீபத்தில் வழங்கியது. இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட அந்த விருதினை பெறுவதற்கு அவர் ஜப்பான் சென்றபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது தமிழ் ஆர்வத்தை புரிந்து கொண்டு, ஏ.ஆர்.ரகுமான் அவர்களே வருக வருக. எல்லா புகழும் இறைவனுக்கே -என்ற வாசகத்தை தமிழில் எழுதிய அட்டைகளுடன் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதைப்பார்த்து பூரிப்படைந்த ஏ.ஆர்.ரகுமான், அதை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.