இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக, வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் சல்மான்கான். தற்போது இவர் மும்பையில் உள்ள தனது கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சிலதினங்களுக்கு முன்னர் குடும்ப பிரச்னை காரணமாக சல்மான் இந்த வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும், பந்தராவில் உள்ள வீட்டிற்கு குடிபோக இருப்பதாகவும் செய்தி வெளியானது. ஆனால் இதை சல்மானின் தந்தை சலீம்கான் முற்றிலும் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... ‛‛இந்த செய்தி முட்டாள்தனமானது. இது பத்திரிகையாளர்களால் வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்ட செய்தி. இந்த செய்தி முற்றிலும் தவறானது. செய்தி பரப்பியவருக்கு எங்கள் குடும்பத்தையும், பத்திரிக்கைதுறை பற்றியும் ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறேன். சல்மான் எங்கும் போகவில்லை, எங்களுடன் கேலக்ஸி வீட்டில் தான் வசிக்க போகிறார்'' என்று கூறியுள்ளார்.