ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்மிதா பாட்டில், தனது 31வது வயதிலேயே இறந்துவிட்டார். இவர் இறந்த பின்னர் கூட அவர் நடித்த 10 படங்கள் வெளியாகின. அந்தளவுக்கு பிஸியாக நடித்தவர். இவரது நினைவாக இவரது பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஸ்மிதா பாட்டில் விருது, கத்ரீனா கைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கத்ரீனாவிற்கு இந்த விருது வழங்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஸ்மிதா பாட்டில் எவ்வளவு பெரிய நடிகை, திறமையான நடிகை, குறுகிய காலத்திலேயே திரைத்துறையில் சாதித்து இன்று வரை பேசப்படுகிறார். அவரை தன் படத்தில் நடிக்க வைக்க எவ்வளவு நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் காத்திருந்தார்கள். அப்படி இருக்கையில் கத்ரீனா என்ன சாதித்துவிட்டார் என்று அவருக்கு இந்த விருது வழங்கபோகிறார்கள் என்று பாலிவுட்டில் ஒருபுறம் சலசலப்புடன் கூடிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
என்ன தான் எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும் செப்., 19ம் தேதி அவருக்கு இந்த விருது வழங்கப்போவது உறுதி தான்.