ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லண்டன் வாழ் தமிழர் ஜெய் ஆகாஷ். சினிமாவில் நடிக்கும் ஆசையில் ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து வந்தார். தெலுங்கில் ஆனந்தம் படமும், தமிழில் ராமகிருஷ்ணா படமும் அவருக்கு அடையாளம் கொடுத்தது. தமிழில் குருதேவா, சேவல், அமுதே, கிச்சா வயது 16, காற்றுள்ளவரை உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் அவரால் நிலையான இடத்துக்கு வரமுடியவில்லை. வாய்ப்புகள் குறைந்ததும் ஆயுத போராட்டம், காதலன் காதலி, படங்களை தமிழிலும் வின், மிஸ்டர் ராஜேஷ், ஆ அடாரு படங்களை தெலுங்கிலும் இயக்கி, நடித்தார். ஒரே மனிதன் என்ற படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கித் தயாரித்தார் இந்த படத்தை 6 மொழிகளில் தயாரித்தார். இது இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் ஜெய் ஆகாஷ் விநியோகஸ்தர் ஆகியிருக்கிறார். புதுமுகங்கள் உருவாக்கி இருக்கும் ஒறுத்தல் என்ற படத்தை வாங்கி தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ராமகிருஷ்ணாதான் நான் முதன் முதலில் ரிலீஸ் செய்தபடம்.
'ஒறுத்தல்' படக்குழு என்னை சந்தித்து ரிலீஸ் செய்ய உதவி கேட்டார்கள். பொதுவாகவே என்னை தேடி வந்து உதவி கேட்டால் என்னால் முடிந்தவரை உதவும் பழக்கம் உள்ளவன். அதன் அடிப்படையில் படத்தை பார்த்தபோது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஒரு ஆங்கில கிரைம் த்ரில்லர் படத்தை தமிழில் பார்ப்பது போன்ற வேகத்தோடு இருந்தது. அதனால் படத்தை நானே வாங்கி வெளியிட முடிவு செய்தேன். தொடர்ந்து திறமையான இளைஞர்களை ஊக்விக்கும் விதமாக அவர்கள் படங்களை வாங்கி வெளியிட முடிவு செய்திருக்கிறேன். என்கிறார் ஜெய் ஆகாஷ்.