தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல பிரிவுகளில் வெற்றி கண்டுள்ளார். 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து திரை உலகில் வெற்றிகரமாக 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மோகன்பாபுவை கௌரவிக்கும் விதமாக இன்று(செப்டம்பர் 17) விசாகபட்டிணத்தில் மோகன்பாபு40 எனும் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. காங்கிரஸ் எம்.பியும் மோகன்பாபுவின் நெருங்கிய நண்பருமான சுப்ரமணி ரெட்டி இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார். ஒட்டுமொத்த மஞ்சு குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்கும் பிரபலங்களை வரவேற்க தயாராகி வருகின்றனர். இவ்விழாவில் பாலிவுடின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜூனா, அனுஷ்கா போன்ற தெலுங்கு திரை உலகின் பிரபலங்களும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படுத்தப்பட்டுள்ளது.