'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தேசிய விருது வென்ற கஞ்சே திரைப்படத்தின் நாயகன் வருண் தேஜிற்கு, கஞ்சே திரைப்படம் திரை உலக வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சே படத்திற்கு பின்னர் மிஸ்டர், பிடா போன்ற படங்களில் வருண் தேஜ் நடித்து வருகின்றார். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் மிஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள், சிக்மங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் பிடா படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட வருண் தேஜை, இயக்குனர் விஜய்குமார் கொண்டா சந்தித்து காதல் கதையம்சம் கொண்ட கதை ஒன்றை கூறியுள்ளார். வருண் தேஜிற்கு விஜய்குமார் கூறிய கதை பிடித்துப்போனதால் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மிஸ்டர், பிடா படங்களை முடித்த பின்னர் விஜய்குமார் படத்தை துவங்க வருண் திட்டமிட்டுள்ளாராம். தற்போது இப்படத்திற்கான தயாரிப்பாளரை தேடும் பணியில் தற்போது இயக்குனர் விஜய் குமார் இறங்கியுள்ளார்.