மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் கூட, கேரளா மாநிலத்தின் மிகச்சிறந்த நடனங்களில் ஒன்றான 'புலிகளி'யை நேரில் பார்த்தது இல்லை என துல்கர் சல்மானுக்கு நீண்ட நாட்களாக ஒரு வருத்தம் இருந்தது. அது என்ன புலிகளி..? கேரள மாநிலத்தின் கலாசார தலைநகரம் என்று அழைக்கப்படும் திருச்சூரில், ஓணம் கொண்டாடத்தின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும் புலிகளி (புலியாட்டம்) என்கிற கிராமிய நடனம். மிகவும் பிரபலமானது. உடல் முழுவதும் வண்ணங்களை பூசி, தொப்பையில் வித விதமான புலி உருவங்களை வரைந்து, செண்டை மேளத்திற்கு ஏற்றதுபோல் உடலை லேசாக அசைத்து ஆடுவதே புலிகளி.
இந்த புலிகளி'யை சமீபத்தில் நேரில் பார்க்கும் வாய்ப்பு துல்கர் சல்மானுக்கு கிட்டியது. சத்யன் அந்திகாடு டைரக்சனில் தற்போது நடித்துவரும் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படப்பில் இருந்தவருக்கு புலிகளியை காண அழைப்பு வந்தது.. சந்தோஷத்துடன் அங்கே சென்ற துல்கர் 'புலிகளி'யை நேரில் ரசித்ததுடன் உற்சாக மிகுதியால் தானும் அவர்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிட்டார். இதனால் 'புலிகளி' ஆட்டக்காரர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்களாம்.