இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திடீர் சர்ப்ரைஸாக பிருத்விராஜ் டைரக்சனில் 'லூசிபர்' என்கிற படத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானதும் மலையாள சினிமா ரசிகர்களுக்கு சந்தோசம். திரையுலகத்தினருக்கோ, குறிப்பாக மோகன்லால், பிருத்விராஜ் வட்டாரத்தை பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கோ குழப்பம். ஆனால் மோகன்லால் பிருத்விராஜ் டைரக்சனில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ள செய்தியை பார்த்தாலே எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
பிருத்விராஜின் தந்தை சுகுமாரன் திரையுலகிற்கு வந்தபின் தான் மோகன்லால் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மோகன்லால் வளர்ந்து வந்த நேரத்தில் சுகுமாரன் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அதேபோல மறைந்த நடிகர் பரத் கோபியும் மோகன்லாலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர். மோகன்லாலின் நலம் விரும்பியும் கூட. அவரது மகன் முரளி கோபிதான் இந்தப்படத்திற்கு கதை எழுதுகிறார். தந்து நண்பர்கள் இருவரது மகன்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்த மோகன்லால், இப்போது நேரம் கூடி வரவே உடனே ஓகே சொல்லிவிட்டார்.
படத்தில் பிருத்விராஜுடன் நடுவில் இருப்பவர் மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் இந்தப்படத்தை தயாரிக்கும் ஆன்டணி பெரும்பாவூர்.. இடதுபுறம் இருக்கும் இன்னொருவர்தான் நடிகர் பரத்கோபியின் மகன் முரளிகோபி.