நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
நடிகை லிஸியும், இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். காதல் வாழ்க்கை கசந்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தனர். சொத்துக்களையும் நீதிமன்றத்தின் மூலம் பிரித்துக் கொண்டனர்.
இவர்களது விவாகரத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் விவாகரத்தில் உறுதியாக இருப்பதை பதிவு செய்து கொண்டு அதற்கான பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டது. பின்னர் வழக்கின் தீர்ப்பை வருகிற 20ந் தேதி பிறப்பிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. 20ந் தேதி நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டால் மட்டுமே இருவருமே சட்டரீதியாக கணவன் மனைவி அல்ல என்று பொருள். ஆனால் அதற்குள் லிஸி நேற்று வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று "விட்டு விடுதலையாகிவிட்டேன்" என்ற அறிக்கை வெளியிட்டார்.