அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
தீனா, ரமணா ஹிட் படங்களுக்குப்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் கஜினி. சூப்பர் ஹிட்டான அந்த படத்தில் சூர்யா- அசின் ஜோடியாக நடிக்க, இன்னொரு நாயகியாக நயன்தாராவும் நடித்தார். ஆனால் அதன்பிறகு முருகதாஸ் இயக்கிய படங்களில் நயன்தாரா நடிக்கவில்லை என்றபோதும், ஆர்யாவை வைத்து அட்லி இயக்கத்தில் அவர் தயாரித்த ராஜா ராணி படத்தில் நடித்தார் நயன்தாரா.
இந்தநிலையில், தற்போது மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து தமிழ், தெலுங்கில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நயன்தாரா நடிப்பதாக கடந்தசில தினங்களாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. ஆனால், அந்த செய்தியை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.
மகேஷ்பாபு நடித்து வரும் இந்த படத்தின் நாயகியாக ஏற்கனவே ராகுல்ப்ரீத் சிங் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, நதியா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆக, இந்த படத்தில் இன்னொரு நாயகிக்கு வாய்ப்பே இல்லை. மேலும், முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.