ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் 'எஸ் 3' படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் நெருங்கிய உறவினரான கே.ஈ.ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ க்ரீன் சார்பாக தயாரிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் மற்றுமொரு உறவினருக்குச் சொந்தமான ஆதனா ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சூர்யா அவருடைய 35வது படத்தையும் தன்னுடைய சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டெர்டெயின்மென்ட் மற்றும் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக பத்து நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 35வது படத்திற்குப் பிறகு அவர் நடிக்க உள்ள 36வது படத்தையும் சூர்யாவின் மற்றுமொரு நெருங்கிய உறவினரான எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோருக்குச் சொந்தமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில்தான் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. விரைவில் இந்தப் படத்தை இயக்கப் போவது யார், மற்ற நடிகர்கள் யார் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளார்கள். இன்று புரட்டாசி மாதம் ஆரம்பமாவதால் , சூர்யா எங்களது தயாரிப்பில் நடிக்கப் போகிறார் என்ற ஒரே ஒரு தகவலை மட்டும் வெளியிட்டார்கள்.
'அஞ்சான்' படத்திற்குப் பிறகு 'மாசு என்கிற மாசிலாமணி, பசங்க 2, 24, இப்போது நடித்து வரும் 'எஸ் 3', அடுத்து நடிக்க உள்ள 'சூர்யா 35, சூர்யா 36' என அரை டஜன் படங்களை தன் சொந்தத் தயாரிப்பிலோ அல்லது உறவினர்களின் தயாரிப்பிலோ மட்டுமே சூர்யா நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன், 2 டி என்டர்டெயின்மென்ட், டிரீம் வாரியர் பிக்சர்ஸ், பிரின்ஸ் பிக்சர்ஸ், ஆதனா ஆர்ட்ஸ், பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சூர்யா மற்றும் அவருடைய உறவினர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். வெளி தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் அவர் இனி நடிக்க மாட்டாரா என்ற கேள்வி தற்போது எழுகிறது. எதிர் வரும் காலங்களில் இது மற்ற தயாரிப்பாளர்கள் தரப்பில் விவாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.