‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இயக்குனர் பாரதிராஜா இப்போது முழுநேர நடிகராகிவிட்டார். அவர் விதார்த்தின் பாசமான தந்தையாக ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். படத்தின் பெயர் குரங்கு பொம்மை. குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நித்திலன் இயக்கி உள்ளார். ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரித்துள்ளது. டெல்னா டேவிஸ் என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், ஜோக்கர் குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், ரமா உள்பட பலர் நடித்துள்ளனர். பி.அஜ்னீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார், என்.எஸ்.உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குரங்கு பொம்மை பற்றி இயக்குனர் நித்திலன் கூறியதாவது: மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கியிருக்கிறேன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். அப்பா, மகனுக்கும் இடையேயான பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்திருக்கிறேன் . படப்பிடிப்பு 59 நாட்கள் தொடர்ச்சியாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. என்கிறார் நித்திலன்.