‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
முன்னாள் பிரதமர் ராஜீவ், மனித வெடிகுண்டால் தமிழ்நாட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழில் ஆர்.கே.செல்வமணி குற்றப்பத்திரிக்கை என்ற படத்தை எடுத்தார். இந்தப் படம் தடை செய்யப்பட்டு நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்து தோல்வி அடைந்தது. கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சயனைட் என்ற பெயரில் ராஜீவ் கொலையாளிகளான சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருவுக்கு தப்பிச் சென்றது. அங்கு வைத்து அவர்களை போலீஸ் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றது ஆகியவற்றை மையமாக வைத்த எடுத்தார். தமிழில் குப்பி என்ற பெயரில் வெளிவந்தது.
தற்போது மீண்டும் ஏ.எம்.ஆர் ரமேஷ் ராஜீவ் படுகொலை பற்றிய படத்தை இயக்குகிறார். இது ராஜீவ் படுகொலையில் நேரடி தொடர்புடைய மனித வெடிகுண்டாக செயல்பட்ட இளம் பெண் தணுவின் கதை. தணு எப்படி உருவானார். அவர் இயக்கதில் சேர்ந்தது எப்படி? அவர் மனித வெடிகுண்டாக சம்மதித்தது எப்படி? அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்ன? அவரது மனநிலை என்ன? என்கிற விஷயங்களோடு படம் தயாராகிறது. தி ஹியூமன் பாம்ப் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. தமிழில் மனித வெடிகுண்டு என்று பெயர் வைக்கப்படலாம் என்று தெரிகிறது. மஞ்சு கிருபா, அக்ஷயா கிரியேஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. வருகிற 21ந் தேதி இதன் துவக்க விழா பெங்களூருவில் நடக்கிறது. கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா படப்பிடிப்பை துவக்கி வைக்கிறார்.