விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த பாகுபலி எனும் சரித்திர திரைப்படம் பல மொழிகளிலும் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. பிரபாஸ் நாயகனாக நடித்த இப்படத்தில் ரானா வில்லனாக நடித்து அசத்தினார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து ரானா விலகி, அவரது பிற படங்களில் நடித்து வருவதாக டோலிவுடில் தகவல் பரவியது. ஆனால் இதனை பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
பாகுபலி படத்தின் இணை தயாரிப்பாளர் ஷோபு தனது டுவிட்டர் பக்கத்தில் ரானா தனது கதாபாத்திற்கான படப்பிடிப்பை இன்னும் நிறைவு செய்யவில்லை அவர் படப்பிடிப்பை விலகவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்.எம்.கீரவாணி இப்படத்தின் பின்னணி இசையில் பிசியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஷோபு, பாடல்களுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2017 ஏப்ரலில் இப்படம் வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.