டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை கண்டித்து இன்று தமிழ்நாட்டில் முழு அடைப்பு நடக்கிறது. இதில் சின்னத்திரை கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் தளபதி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் வன்முறையாளர்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு அவர்களின் சொத்துக்களை நாசம் செய்துள்ளனர். முதல்வரையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.
இதனை கண்டித்து 16ந் தேதி (இன்று) நடக்கும் வேலை நிறுத்தத்தில் சின்னத்திரை கலைஞர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இதையொட்டி சின்னத்தரை தொடர்பான எந்த படப்பிடிப்புகளும் நடைபெறாது என தெரிவித்துக் கொள்கிறோம். காவிரி பிரச்சினையில் முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உடன் நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.