வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
உச்ச நடிகர் உலக அளவில் பிரபலம். உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொடுக்கும் சந்தோஷத்தை அவரது குடும்பம் அவருக்கு தருவதில்லை என்பது ஊரறிந்த ரகசியம். இப்போது அவர் உச்சகட்ட கவலையில் இருக்கிறார் என்பதுதான் உண்மை. அவரது சவுந்தர்யமான இரண்டாவது மகளுக்கும், மருமகனுக்கும் சில மாதங்களாகவே மனஸ்தாபம். தன் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக கணவன் மீது மனைவிக்கு கோபம், தன் பேச்சை கேட்பதில்லை என்ற மனைவி மீது கணவருக்கு கோபம். இந்த ஈகோ பிரச்சினையால் கடந்த சில மாதங்களாகவே இருவரும் அவரவர் வீட்டில் தனித்தனியாக வசிக்கிறார்களாம்.
எப்படியாவது சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து விடலாம் என்று உச்ச நடிகர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டதாம். இருவரும் இப்போது சட்டப்படி பிரிந்து விட முடிவு செய்து விட்டார்களாம். இருவருமே விரைவில் கோர்ட் படியேற இருக்கிறார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மனைவி அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறாரே என்ற வேதனையில் இருப்பவருக்கு இப்போது மகள் பிரச்சினையும் சேர்ந்து கொண்டிருப்பதால் கவலையின் உச்சத்தில் இருக்கிறாராம். எல்லா பிரச்சினையும் நல்லபடியாக முடிந்து உச்சநடிகர் நெருப்பு மாதிரி எழுந்து வரவேண்டும் என்பதே அவரது கோடான கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.