டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா' காமெடி ஷோ மூலம் சந்தானத்தை சின்னத்திரையில் பிரபலமடைய வைத்தவர் ராம் பாலா.இன்று ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்ந்துவிட்ட சந்தானம் காமெடியனாக தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கினார். அவருக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த ராம் பாலா உடன் மனஸ்தாபம் ஏற்பட்டு சில வருடங்களாக அவருடன் பேசாமல் இருந்தார் சந்தானம்.
இதற்கிடையில் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனதால் ராம்பாலாவுடன் சமாதானமாகி அவரை பெரிய திரைக்கு கொண்டுவந்தார் சந்தானம். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் துட்டு மேல் துட்டு லாபம் கொடுத்தது. எனவே அடுத்தப் படத்தையும் சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்க திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கும் தேடி வர, அந்தப் படத்தை இயக்க இருக்கிறார் ராம்பாலா.
பெயரிடப்படாத இந்தப்படத்தை, 'ஸ்டீவ்ஸ் கார்னர்' நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார் ஸ்டீபன். ராம் பாலாவின் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதம் ஆரம்பிக்க உள்ளனர்.