இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நேற்று முன்தினம் சென்னையில், வெங்கட்பிரபு வின் சென்னை-28 பார்ட்-2 படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் ஆஜரான நிலையில், ஜெய் மட்டும் வரவில்லை. எனக்கு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்று சொல்லி அவர் நழுவி விட்டதாக சொன்னார்கள்.
ஆனால், அம்மா கிரியேசன்ஸ் சிவா பேசுகையில், அவர் தன்னை அஜீத் என்று நினைத்துக்கொள் கிறார் என்று ஜெய்யை மேடையில் விளாசித்தள்ளி னார். அப்போது வெங்கட்பிரபு குறுக்கிட்டு, நான் ஜெய்யை கண்டிப்பாக வரவேண்டும என்று அழைக்கவில்லை. அழைத்திருந்தால் வந்திருப்பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
முன்னதாக, இந்த படத்தில் நடித்துள்ள யாருக்கும் ஈகோ கிடையாது. பணம் காசைப்பற்றி கவலைப்படாமல் நடித்துக்கொடுத்தனர். விஜய் வசந்தெல்லாம் காருக்கு பெட்ரோல் போட்ட காசைகூட கேட்கவில்லை. அதோடு பலநாட்கள் ஓட்டல்களுக்கு அழைத்து சென்று செலவு செய்தார். அந்த அளவுக்கு தங்களது சொந்த படம் என்கிற மனநிலையில்தான் நடித்தார்கள் என்று சொன்ன வெங்கட்பிரபு, படப்பிடிப்பு நடந்து வந்தபோது ஜெய்தான் ஒருநாள் ரொம்ப பீல் பண்ணினார். படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு 2 பாட்டு, பிரேம்ஜிக்கு ஒரு பாட்டு. ஆனா எனக்கு மட்டும் ஒரு பாட்டுகூட கிடையாதா? என்று பீல் பண்ணியதாகவும் சொன்னார். ஆக, ஷோலோ ஹீரோவாக 20 படங்களில் நடித்து விட்ட தனக்கு ஒரு பாடல்கூட படத்தில் இல்லாததுதான் ஜெய்க்கு பெரிய வருத்தமாம். அதனால்தான் சென்னை-28 பார்ட்-2 பிரஸ்மீட்டில் ஆப்சென்டாகி விட்டாராம் ஜெய்.