தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, பந்த் போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு
விடுத்துள்ளனர். இதற்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு அளித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. பெட்ரோல் பங்குகள் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை 6 மணி முதல் 6 மணி வரை பங்குகள் செயல்படாது என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து உள்ளது. அதன்படி, நாளை(செப்., 16) தமிழகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் காலை மற்றும் நண்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலை 6மணிக்கு மேல் மாலை காட்சியும், இரவு காட்சிகளும் வழக்கம் போல் திரையாகும் என்று திரையரங்குகள் சங்கம் அறிவித்துள்ளது.