ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்த ஓணம் பண்டிகைக்கு மோகன்லால் தனது ரசிகர்களுக்கு இரண்டு பரிசுகள் தந்துள்ளார். ஒன்று அவர் நடித்துள்ள 'ஒப்பம்' படத்தின் ரிலீஸ்.. மற்றொன்று அவர் நடித்து அடுத்தமாதம் வெளியாக இருக்கும் 'புலிமுருகன்' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது. முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லரில் மோகன்லாலும் எதிரிகளும் விதவிதமான ஆயுதங்களை கையாளுவதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.. கூடவே அந்த உறுமலுடன் உலாவரும் அந்த புலியும் நம்மை பயமுறுத்துகிறது..
ஆனால் 'புலி முருகன்' ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களில் பலர் அதன் இறுதிப்பகுதியில் ஒரு ஆளை புலி ஒன்று துரத்திச்செல்வது போன்று இடம்பெற்றுள்ள காட்சியில் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளார்கள். காரணம் அந்த புலியை கிராபிக்ஸில் சரியாக வடிவமைக்காமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான்.. இதுகுறித்த கருத்தை பலரும் பகிர்ந்துகொண்டபோது, அது படத்தின் இயக்குனர் வைசாக்கின் கவனத்துக்கும் போனது..
ஆனால் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் ஆச்சர்யப்படுத்தும் விதமாக உள்ளது.. ஆம்.. அந்த ட்ரெய்லர் காட்சியில் ஆளை விரட்டிச்செல்லும் புலி கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட புலி இல்லையாம்.. நிஜமான புலியை வைத்தே அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்களாம். ஹெச்.டி வீடியோவில் பார்க்கும்போது அது துல்லியமாக தெரியுமாம். ஒருவேளை ட்ரெய்லருக்காக கட் பண்ணப்பட்ட அந்த ஷாட்டில் வேண்டுமானால் சிறிய குறைபாடு நேர்ந்திருக்கலாம். ஆனால் படத்தில் பார்க்கும்போது மிரட்டலாக இருக்கும் என கூறியுள்ளார் வைஷாக்