ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஓணம் பண்டிகை நேற்று கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. குறிப்பாக மலையாள திரையுலக நட்சத்திரங்கள் ஓணம் பண்டிகையை உறவினர்களுடன், நண்பர்களுடன் விதவிதமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ஆனால் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இதில் கூட வித்தியாசமான பாணியை பின்பற்றி ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.. ஆம்.. கடந்த வெள்ளியன்று அவர் இயக்கிய 'ஊழம்' படம் வெளியானது அல்லவா..? அந்த படக்குழுவினரை தனது வீட்டிற்கே வரவழைத்து ஒரு குடும்ப விழாவாக நடத்தியுள்ளார்..
அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்.. “ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்போ, அல்லது படம் வெளியான பின்போ அதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பார்ட்டி வைப்பது வழக்கம்.. ஆனால் எனக்கோ, நம் படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸாவதால் ஏன் படக்குழுவினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாட கூடாது என்று தோன்றியது.. அதனால் தான் என் வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டேன்” என்கிறார் ஜீத்து ஜோசப்.
இந்த ஓணம் கொண்டாட்ட வீடியோ ஒன்றையும் ஜீத்து ஜோசப் வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் கதாநாயகி திவ்யா பிள்ளை, தங்கையாக நடித்த ரஸ்னா பவித்ரன், பிருத்விராஜின் நண்பராக நடித்த நீரஜ் மாதவ் உட்பட பலர் கலந்துகொண்டு உற்சாகமாக ஓணம் கொண்டாடியதை பார்க்க முடிந்தது. படத்தின் நாயகன் பிருத்விராஜ் மட்டும் இந்த நிகழ்வில் பங்குபெறவில்லை.