தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான ராகேஷ் ரோஷன், தற்போது க்ரிஷ் படங்களின் வரிசையில் நான்காவது பாகமாக க்ரிஷ் -4 படத்தை இயக்க இருக்கவிருக்கிறார். கோய் மில் கயா படத்தில் இருந்துதான் க்ரிஷ் படங்களின் வரிசையை இயக்க துவங்கினார் இயக்குநர் ராகேஷ் ரோஷன் . க்ரிஷ் படங்கள் அனைத்திலும் சூப்பர் ஹீரோவாக அவரது மகனான ஹிருத்திக் ரோஷனே முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் . தொடர்ந்து சூப்பர் ஹீரோவாக நடித்து அதில் வெற்றியும் பெற்றவர் ஹிருத்திக் ரோஷன் தான். சில தினங்களுக்கு முன் க்ரிஷ் -4 படத்தை ராகேஷ் ரோஷன் உருவாக்க போவாதகாவும், ஆனால் தற்போது ராகேஷ் ரோஷன் ஒருப்படத்தில் நடித்து வருவதால் க்ரிஷ்-4 படம் 2017 துவங்கும் என்று செய்திகள் வெளியாகின . இதைத்தொடர்ந்து, நேற்று ஹிருத்திக், க்ரிஷ்-4 படம் பற்றிய செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறியதாவது...." க்ரிஷ் -4 படத்திற்கு விநாயகர் ஆசிர்வதித்து விட்டார். ரசிகர்கள் எல்லோரும் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர் என்று நம்புகிறேன். இதற்கு முன் வெளியான முன்று க்ரிஷ் படங்களும் மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தன " என்றார்.
2017-ல் க்ரிஷ்-4 படம் துவங்கி 2018ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.