இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
யுவன்ஷங்கர் ராஜாவிற்குப் பிறகு இளம் இசையமைப்பாளராக குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். பத்து வருடங்களுகுக்கு முன்பு 2006ம் ஆண்டில் வெளிவந்த 'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் என்ற ஒரு அடையாளம் இருந்தாலும் ரகுமானைப் போல அல்லாமல் வேறு ஒரு பாதையில் தன் இசைப் பயணத்தை கடந்த 10 வருடங்களாக வெற்றிகரமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தமிழ்த் திரையுலகின் வியாபார வட்டங்களுக்குரிய நம்பிக்கைக்கு உகந்த நாயகனாகவும் வளர்ந்திருக்கிறார்.
'வெயில்' படத்திற்கு அவர் இசையமைக்கும் போது அவருடைய வயது 19 மட்டுமே. 'வெயில்' படத்திலேயே...'வெயிலோடு விளையாடி...., உருகுதே மருகுதே...' என ஒரு அழுத்தமான இசையை முதல் படத்தில் பதிவு செய்தவர். அவருடைய மூன்றாவது தமிழ்ப் படமாக அஜித் நடித்த 'கிரீடம்' படமும், எட்டாவது தமிழ்ப் படமாக ரஜினிகாந்த் நடித்த 'குசேலன்' படமும் அமைந்தது. “பொல்லாதவன், அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மதராசப்பட்டிணம், ஆடுகளம், தெய்வத் திருமகள், மயக்கம் என்ன, பரதேசி, விஜய் நடித்த 'தலைவா', ராஜா ராணி, சைவம், டார்லிங், கொம்பன், காக்கா முட்டை, விசாரணை, தெறி” என அவருடைய இசைப் பயணத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பல படங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்துவிட்டதால் இசையமைக்கும் படங்களைக் குறைத்துக் கொண்டு தான் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார்.
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரே சமயத்தில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் தற்போது வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.