வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கரீனா கபூர். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பை விட்டு விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது சில விழாக்களில் பங்கேற்று வருகிறார். அப்படி செல்லும்போது அவரை நோக்கி சில கேள்விகள் எழுகிறது. இதனால் கரீனா மிகவும் கோபம் அடைகிறார். அப்படி என்ன கேள்வி கேட்கிறார்கள்....?
அதற்கு கரீனா பதிலளிக்கிறார்... ‛‛நான் கர்ப்பமாக இருக்கும் இந்த சூழலில் பலரும் என்னிடம், என்ன குழந்தை என்று பார்த்துவிட்டீர்களா, ஆணா, பொண்ணா? என்று மீண்டும் மீண்டும் ஒரு கேள்வியை கேட்கிறார்கள். எந்த குழந்தையாக இருந்தால் என்ன, இதில் என்ன வித்தியாசம் வேண்டியிருக்கிறது. நான் ஒரு பெண், எனக்கு பெண் குழந்தை பெறவே விருப்பம். நான் பெண்ணாக இருந்தாலும் என்னுடைய குடும்பத்தில் ஆண் செய்ய வேண்டியதற்கும் மேலாக செய்திருக்கிறேன்.
மேலும் திருமணமாகிவிட்டது தொடர்ந்து நடிப்பீர்களா?, குழந்தை பிறந்துவிட்டால் தொடர்ந்து நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள்?, இதுபோன்ற கேள்விகள் என்னை மிகவும் கோபமடைய செய்கின்றனர். இவர்களை போன்றோர் எல்லாம் ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகள் இல்லை என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்ல விரும்புவது, ஒரு பெண்ணால் மட்டுமே இன்னொரு பெண் உயிரை கொடுக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.