டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிங்கம்-2வுக்கு பிறகு சூர்யா நடித்த அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, பசங்க-2, 24 ஆகிய படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் தற்போது ஹரியின் சிங்கம்-3 படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். முந்தைய இரண்டு பாகங்களை விடவும் இந்த மூன்றாவது பாகத்திற்காக சண்டை காட்சிகளில் கடினமாக உழைத்து வருகிறாராம் சூர்யா. அதோடு சிங்கம்-3யில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோரும் இருப்பதால் தமிழைப்போலவே தெலுங்கிலும் அதிகப்படியான தியேட்டர்களில் படத்தை வெளியிடப்போகிறார்களாம்.
அதுமட்டுமின்றி, சூர்யா நடிக்கும் படங்களுக்கு சமீபகாலமாக ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர் நடித்து தமிழில் வெற்றி பெறாத படங்கள் எல்லாமே தெலுங்கில் கணிசமான தொகை வசூலித்துள்ளது. அதிலும், கடைசியாக சூர்யா நடித்து வெளியான 24 படம் தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. ஆனால் தெலுங்கில் தமிழ்நாட்டு வசூலில் இரு மடங்கு வசூலித்துள் ளது. அந்த வகையில், தமிழ் ரசிகர்களால் அவ்வப்போது கைவிடப்பட்ட சூர்யாவை ஆந்திர ரசிகர்கள்தான் கைகொடுத்து காப்பாற்றியுள்ளனர். அதனால், எஸ்-3 படத்தை தெலுங்கிலும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.