தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி படத்தில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித்திற்கு மெட்ராஸ் படம் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அந்த படத்தின் மேக்கிங் கைப் பார்த்து பல முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க தயாராகினர். குறிப்பாக மெட்ராஸ்க்குப்பிறகு ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க சூர்யா தயாராகிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து எதிர்பாராதவிதமாக ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் ரஞ்சித்திற்கு அடித்தது. அதை அவர் சூர்யாவிடம் சொன்னபோது, பரவாயில்லை இன்னொரு சமயத்தில் நாம் இணைவோம் என்று ரஞ்சித்தை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
அதேபோல், கபாலி படத்தின் ஹிட்டுக்குப்பிறகு விஜய்க்கும் ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருந்த ரஞ்சித், அவரை சந்தித்தும் சொன்னாராம். அதில் நடிக்க விஜய்யும் ஓகே சொல்லி விட்டாராம். பைரவா முடிந்ததும் அதற்கான வேலைகளில் இறங்கலாம் என்று முடிவு செய்திருந்தபோது மீண்டும் ரஜினி படத்தை இயக்குமாறு ரஞ்சித்திற்கு அழைப்பு விடுத்தார் தனுஷ். ஆக, இரண்டு முறையும் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு தேடி வந்திருக்கிறது.
அதன்காரணமாக, ரஜினி படத்தினால் சூர்யா, விஜய் ஆகிய இருவரது படங்களையும் இயக்குவதை தள்ளிப்போட்டுள்ள ரஞ்சித், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கியதும் விஜய், சூர்யா இருவரையும் வைத்து அடுத்தடுத்து படமெடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.