அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
இந்த தகவல் எந்தளவுக்கு உண்மையோ... ஆனால் திரையுலகில் இப்படியொரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. கார்த்தியை வைத்து தற்போது காற்று வெளியிடை படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மணிரத்னம் மற்றொரு படத்தையும் இயக்க உள்ளார் என்பதே அந்த தகவல்.
ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு படம் குறித்து கவனம் செலுத்த மாட்டார் இயக்குநர் மணிரத்னம். முதல் படம் தொடங்கி இன்றுவரை அவர் கடைபிடிக்கும் பகழக்கம் இது. ஆனால், தற்போது இந்த வழக்கத்துக்கு மாறாக கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளையும் அவர் துவங்கியிருப்பதாக தகவல் அடிபடுகிறது. அதுமட்டுமல்ல, அந்தப்படத்தை மணிரத்னம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா அந்த புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம். ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியும் தமிழில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அதாவது அந்தப் படத்தின் சம்பளமாக தமிழ் ரைட்ஸை வாங்கி, நேரடி தமிழ்ப்படமாக வெளியிட உள்ளாராம் மணிரத்னம்.
காற்று வெளியிடை படத்தின் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கும் மணிரத்னம், அதன் வேலைகள் முடிவடைந்ததும் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்திற்கான பிரீ புரடக்ஷன் வேலைகள் துவங்க திட்டமிட்டுள்ளாராம்.