'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும், நம்பர் ஒன் நடிகையாகவும் வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‛இருமுகன்' படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நயன்தாராவுக்கு ஏற்கனவே சில காதல்கள் கசந்து போன நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டுள்ளார். இதை இருவரும் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சமீபகாலமாக இருவரும் எங்கு போனாலும் ஒன்றாகவே வலம் வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா, இன்று ஒணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். அதுவும் தனது காதலரான விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடியிருக்கிறார். கேரள பாரம்பரிய புடவையை நயன்தாரா அணிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக செல்பி எடுத்து மகிழ்ந்து அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கூடவே அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டிருக்கிறார்.