ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் மட்டுமல்லாமல், கடந்த இரண்டு வருடங்களாக மற்ற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் மோகன்லால். அந்தவகையில் கடந்த வருடங்களில் விஜய்யுடன் ஜில்லா, புனித் ராஜ்குமாருடன் கன்னடத்தில் 'மைத்ரி' ஆகிய படங்களில் நடித்த மோகன்லால், இந்த வருடத்தில் சமீபத்தில் ஒருமாத இடைவெளியில் தெலுங்கில் 'மனமந்தா' மற்றும் 'ஜனதா கேரேஜ்' என இரண்டு படங்களை ரிலீஸ் செய்துவிட்டார்.. இதனால் கடந்த ஒரு வருடமாக மலையாளத்தில் அவரது படம் எதுவும் ரிலீசாகாதா நிலை கூட இருந்தது. ஒரு வருடம் கழித்து சில தினங்களுக்கு முன் தான் மலையாளத்தில் 'ஒப்பம்' படம் வெளியானது..
சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது நடிப்பு பயணம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டிருந்தார்.. அவரது வியாபார எல்லையை விரிவுபடுத்தி அதன்மூலம் அவரது மார்க்கெட் வேல்யுவை அதிகரிக்க நினைக்கும் முயற்சியாகத்தான் வேற்று மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளாரா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன்லால், “நான் வியாபார பொருள் இல்லை.. நான் ஒரு நடிகன்.. தெலுங்கில் என்னை இயக்கிய இரண்டு இயக்குனர்களும் தங்களது படத்தில் நான்தான் நடிக்கவேண்டும் என வற்புறுத்தி அழைக்கும்போது அதை எப்படி என்னால் தட்டமுடியும்” என விளக்கமளித்து இருக்கிறார் மோகன்லால்.