டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி, வேறுபாடு கிடையாது என்று பீரங்கிபுரம் சினிமா விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் தமிழில் நடிக்கும் படம் ‛பீரங்கிபுரம்'. தமிழ்,தெலுங்கு,கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல்பார்வை வெளியீட்டு விழா சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. பர்ஸ்ட்லுக்கை நடிகர் ஸ்ரீகாந்தும், நடிகை நமீதாவும் வெளியிட்டனர்.
பின்னர் பேசிய ஸ்ரீகாந்த்... ‛‛கன்னட மொழியிலிருந்து தேசியவிருது பெற்ற நடிகர் இங்கே தமிழில் நடிக்கிறார். அவரை வரவேற்கிறோம். அவர் மொழி தெரியாது பேசினார். சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி, வேறுபாடு எல்லாம் கிடையாது. இது கர்நாடகத்துக்கும் பொருந்தும், தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கே இவ்வளவு உழைத்திருக்கிறார்கள். சினிமாவில் படப்பிடிப்புக்குப் போய் யோசிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு படம் தொடங்கும் முன்பாகவே ஆறுமாதம் ஒரு வருடம் என்று முன் தயாரிப்பு வேலைகள் செய்திருக்கிறார்கள். நன்றாக ஆயத்தம் செய்கிறார்கள். இப்படி எல்லாரும் செய்தால் காலவிரயம் பண விரயம் ஆகாது. இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். என்றார்.