விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
'சென்னை- 28 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தின் பாடல்களை வெளியிடும்விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிக்கும் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, விஜய்வசந்த், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, அஜய்ராஜ், இளவரசு, விஜயலட்சுமி, அஞ்சனா கீர்த்தி, மகேஸ்வரி, தயாரிப்பாளர் டி.சிவா, வைபவ், மஹத், கிருத்திகா, டாக்டர் வித்யா, அறிமுகம் சனா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
'சென்னை- 28 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஜெய் வழக்கம்போல் வரவில்லை. தன்னை அஜித் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெய், கடந்த சில வருடங்களாக பட புரமோஷன்களுக்கு வருவதில்லை. தன்னை நடிகனாக அறிமுகப்படுத்திய வெங்கட்பிரபுவிடமும் அதை காட்டிவிட்டார்.
ஜெய் வராததை வெங்கட்பிரபு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான டி.சிவா கடுப்பாகிவிட்டார். “ஜெய் இன்னும் வளரவேயில்லை. அதற்குள் தன்னை அஜீத் என்று நினைத்துக் கொள்கிறார். இது தவறு. இந்த நிகழ்ச்சிக்கு அவர் எல்லாருக்கும் முன்பு வந்திருக்க வேண்டும்” என்று ஜெய்யை நேரடியாகவே தாக்கினார்.
படத்தின் புரமோஷனுக்கு யார் வரவில்லை என்றாலும் அவர்களை கண்டிப்பதுதான் நியாயம். ஜெய்யை கண்டித்துப் பேசிய டி.சிவா அஜித் பற்றி பேசும்போது பதுங்கினார். “சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அஜீத் வரலேன்னு சொன்னா பரவாயில்லை. ஏனென்றால், அவரை பொது இடங்களில் பார்க்காத ரசிகர்கள் திரண்டு தியேட்டருக்கு வந்துவிடுகிறார்கள். அவரது படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கிறது. இந்த இடத்தை அடைய அவர் எடுத்துக் கொண்ட உழைப்பும், வலியும் கொஞ்ச நஞ்சமல்ல.” என்றார்
அஜித் வரவில்லை என்றாலும் தவறுதான், ஜெய் வரவில்லை என்றாலும் தவறுதான். இரண்டுபேரையும் சமமாக கருதி கண்டித்திருக்க வேண்டும் அல்லவா?