பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பல குறும்படங்களை இயக்கிய ஜி.ஆறுமுகம் இயக்கி உள்ள பெரும் படம் புயலா கிளம்பி வர்றோம். சேதுபூமி, சட்டம் ஒரு இருட்டறை இரண்டாம் பாகம், ஆச்சர்யம், சும்மா நச்சுன்னு இருக்கு, தொட்டால் தொடரும் படங்களில் நடித்த தமன் ஹீரோ. மதுஸ்ரீ என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர சிங்கம்புலி, கும்கி அஸ்வின், ஆர்.என்.ஆர்.மனோகர், திருமுருகன், பசங்க சிவகுமார், அழகன் தமிழ்மணி, ரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். வி.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார், சார்லஸ்தனா இசை அமைத்துள்ளார். மதுரை, பாண்டிச்சேரி, சென்னை, கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் ஜி.ஆறுமுகம் கூறியதாவது: இது அரசியல்வாதியின் அட்டகாசத்தை சத்தமே இல்லாமல் அடக்கும் இளைஞரை பற்றிய கதை. நாயகன் தமன் தன் நண்பர்களுடன் இணைந்து கேபிள் டி.வி.நடத்துகிறார். அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். அரசியல்வாதிகளின் அட்டூழியங்களை தனது கேபிள் டி.வி. செய்தி மூலம் அம்பலப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் அரசியல்வாதி தமனிடமிருந்து கேபிள் டி.வியை கைப்பற்ற பார்க்கிறார். அதற்காக தனது பணபலம், ஆள்பலத்தை பயன்படுத்துகிறார். ஆனால் தமன் அமைதியாக ஆர்ப்பாட்டமே இல்லாமல் அரசியல்வாதிக்கு எப்படி பாடம் புகட்டுகிறார் என்பதுதான் திரைக்கதை. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த விட்டது. விரைவில் வெளிவருகிறது என்றார் ஜி.ஆறுமுகம்.