கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஆரண்ய காண்டம் படத்தில் அறிமுமான குரு சோமசுந்தரம் ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானார். சமீபத்தில் வெளியான குற்றமே தண்டனை படத்தில் யதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார். கவனிக்கப்படும், தேடப்படும் நடிகராகிவிட்ட குரு சோமசுந்தரத்தின் அடுத்த அவதாரம் வில்லன். யாக்கை படத்தில் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.
கிருஷ்ணா, ஸ்வாதி நடிக்கும் யாக்கை படத்தை குழந்தை வேலப்பன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், பிரிம் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். அதாவது அவர் எந்த வில்லத்தனமும் செய்ய மாட்டார். மற்றவர்கள் வில்லனாக மாறும் சூழ்நிலைகளை உருவாக்குகிறவராக இருப்பாராம்.
இது பற்றி படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன் கூறியிருப்பதாவது: ஜோக்கர் திரைப்படம் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு முகம் என்றால், யாக்கை திரைப்படம் இதுவரை யாரும் கண்டிராத அவருடைய மறுமுகம். யாக்கை படம் மூலம் முற்றிலும் ஒரு புதுமையான குரு சோமசுந்தரத்தை ரசிகர்கள் காண இருக்கிறார்கள். நடிப்பிற்காக எந்த அவதாரம் வேண்டுமானாலும் எடுக்கும் கலைஞரான குரு சோமசுந்தரம் எங்கள் யாக்கை படத்தில் நடிப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிரடி, மிரட்டல் என ஒரு சராசரியான வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வில்லனாக நடித்து வருகிறார்.
ஒரு தப்பான சூழ்நிலையை உருவாக்குபவன் தான் யாக்கை படத்தின் வில்லன். அந்த கதாப்பாத்திரத்தை கனகச்சிதமாக உள்வாங்கி அற்புதமாக நடித்து வருகிறார் . அவருடைய இந்த வில்லன் கதாப்பாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் குழந்தை வேலப்பன்.