அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
காவிரி நதி நீர் பிரச்னை காரணமாக கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து திரைப்பட இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழர்கள் மீதும், தமிழர்களின் உடைமைகள் மீதும் கொலை வெறிதாக்குதல் நடத்தியும், வாகனங்களுக்கு தீ வைத்தும், கர்நாடக அரசுடன் அரசியல் கட்சிகளும், கைகோர்த்துக்கொண்டு இனவெறியுடன் தாக்குதல் நடத்துகின்ற கர்நாடக அமைப்புகளின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒருவார காலமாக தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையிலும், பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயல்பாடு வேதனைக்குரியது. இதற்கு மேலும் தாக்குதல் நடக்கா வண்ணம் பார்த்து கொள்வதோடு, காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு உடனே நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கர்நாடகாவில் வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய மாநில அரசின் தலையாய கடைமையாகும். அங்கே வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை எங்கள் உணர்வுகளை அடக்கிக்கொண்டு பவ்யமாக கேட்டுக்கொள்கிறோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் எங்களது தமிழர்களின் கோடிக்கணக்கான உடைமைகளை சிதைத்தும், தமிழர்களை அடிப்பதையும் பார்க்கும்போது நாங்கள் இந்த தேசத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இனங்களும் தனித்தனியாக தங்களை தாங்களே ஆண்டது போல், நாங்களே ஏன் எங்களை ஆண்டுக்கொள்ளக்கூடாது? என்ற கேள்வியை எங்களது இளைஞர் மனதில் நீங்களே விதைத்துவிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நிலைமை மோசமடைவதற்கு முன்னால் மத்திய மாநில அரசுகள் தங்களது கடமையை சரிவர செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் பாரதிராஜா கூறியுள்ளார்.