டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நில மோசடி புகார் தொடர்பாக, நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உட்பட, ஐந்து பேருக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் இன்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நோட்டீசுக்கு உரிய விளக்கம் தரவில்லை என்றால், போலீசில் புகார் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோலி வுட் வட்டாரங்கள் கூறியதாவது: நடிகர் சங்கத்திற்கு சொந்தமான, 26 சென்ட் நிலம், கூடுவாஞ்சேரி அருகில் வெங்கடபாக்கம் என்ற கிராமத்தில் இருந்நது. அந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு, செல்வம், லதா ஆகிய இருவருக்கும், நடிகர் சங்கத்தின் சார்பில் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலம் விற்பனை தொடர்பாக, நடிகர் சங்கத்தின் பொதுக்குழு, செயற்குழு உட்பட எந்த ஒரு கூட்டத்திலும் ஒப்புதல் பெறவில்லை. எனவே, இந்த நில மோடி தொடர்பாக, அப்போதைய நடிகர் சங்க தலைவர், சரத்குமார், பொதுச்செயலர், ராதாரவி, பொருளாளர், கே.என்.காளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், செல்வராஜ் ஆகிய, ஐந்து பேரிடமும் விளக்கம் கேட்டு, நடிகர் சங்கத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்.
சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கோலிவுட் வட்டாரங்கள் தெரி வித்தன.