ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியிருந்தார் சாட்னா. இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கேஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தியை, சாட்னா டைட்ஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தன் மகளை ஆசைக்காட்டி எங்களிடமிருந்து கார்த்தி பிரித்துவிட்டார் என்று சாட்னாவின் அம்மா, மாயா கண்ணீர் மல்க நம்மிடம் கூறியிருந்தார். இதையடுத்து தொடர்ந்து நடிகை சாட்னாவை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, அவர் நம்மிடம் கூறியதாவது...
‛‛சூழ்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்தேன். எங்களுடைய வீட்டில் நடிக்க சொல்கிறார்கள், ஆனால் கார்த்தி அதை விரும்பவில்லை. அதனால் எனது வீட்டில் நான் வசிக்கவில்லை. தற்போது நான் கார்த்தியுடன் அவரது வீட்டில் அவரது குடும்பத்துடன் வசிக்கிறேன். அடுத்த வருடம் தான் முறைப்படி திருமணம் செய்ய உள்ளோம். என் அம்மாவிடம் பேசி நிலைமையை புரிய வைப்பேன்'' என்று கூறினார்.