ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹரும், ஷாரூக்கானும் நல்ல நண்பர்கள். தற்போது கரண் ஜோஹர், ‛ஏய் தில் ஹே முஷ்கில்' என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். ரன்பீர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்தப்படத்தில் ஷாரூக்கானும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக செய்தி வெளியானது. அது உண்மையாகியுள்ளது.
இதுப்பற்றி கரண் ஜோஹரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛ஷாரூக்கான் உடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக நான் அவருடன் பணியாற்றவில்லை. ஆனால், சமீபத்தில் அந்த வாய்ப்பு வந்தது. அதை வருகிற தீபாவளியன்று நீங்கள் திரையில் காண இருக்கிறீர்கள். சில ஆண்டுகளுக்கு பின் ஷாரூக்கை இயக்கிய போது அவரிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. நான் என்ன எதிர்பார்ப்பேனோ, அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் பெற்றவர் ஷாரூக்'' என்றார்.
கரண் இயக்கியுள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படம் வருகிற அக்.,28-ம் தேதி தீபாவளி விருந்தாக ரிலீஸாக உள்ளது.