தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் தற்போதைய மோஸ்ட் வான்ட்டட் ஹீரோ என்றால் அது அக்ஷ்ய் குமார் தான். ஏனென்றால் அவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக ஹிட்டாகி வருவதால் பலரும் அவரை இயக்க ஆர்வம் கொண்டுள்ளனர். இந்நிலையில், மேரிகோம், சரப்ஜித் போன்ற படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக நடிகர் அக்ஷ்ய் குமாரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் அக்ஷ்ய் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் கருதி, அதன்படி அக்ஷ்யை அணுகியுள்ளார். அவரும் கிட்டத்தட்ட நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். கால்ஷீட் தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்தில் அக்ஷ்ய் குமார், ஐந்து வித்தியாசமான ரோல்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.