பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காவிரி விவகாரத்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக கர்நாடகாவில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு போடும் அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக விளங்கும் கன்னடத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ், நடந்தேறி வரும் வன்முறை சம்பவங்களை பார்த்து வருத்தத்துடன் வீடியோ வடிவில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதில் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது... ‛‛தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நடந்து வரும் வன்முறைகள் வேதனை அளிக்கிறது. சட்டத்தை எல்லோரும் மதிக்க வேண்டும். பஸ்களை கொளுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் முறையல்ல. இதுதான் நாம் நமது குழந்தைகளுக்கு காட்டும் நல் வழியா? வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. முதலில் நாம் மனிதர்களாக இருக்க முயற்சிப்போம். உங்களின் கோபம் எனக்கு புரிகிறது, ஆனால் அதை வன்முறை வாயிலாக வெளிப்படுத்துவது தவறு. வன்முறையை கைவிட்டு அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.