தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் பாபிசிம்ஹா நடித்த சமீபத்திய படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனவே மலையாள படங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார் பாபி சிம்ஹா. ஏற்கெனவே நிவின் பாலி நடித்த 'நேரம்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர்தான் பாபி சிம்ஹா. இந்தப் படம் தமிழில் நேரடிப்படம் போல் விளம்பரம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
நேரம் படத்திற்கு பிறகு நிவின் பாலியின் 'ஒரு வடக்கன் செல்ஃபி' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் பாபிசிம்ஹா. இந்த படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக பாபி சிம்ஹா மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். படத்தின் பெயர்... 'கம்மார சம்பவம்'. திலீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சித்தார்த்தும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ரதீஷ் அம்பாட் இயக்கும் இப்படத்தில் திலீப், சித்தார்த்துடன் இப்போது பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளதால் இந்தப் படத்தை நேரடி தமிழ்ப்படம்போல் இங்கே வெளியிட வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. கேரளாவில் வாழும் தமிழ் இளைஞராக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் பாபி சிம்ஹா! மம்முட்டி நடிப்பில் 'பழசிராஜா' என்ற படத்தை தயாரித்த 'கோகுலம் ஃபிலிம்ஸ்' இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20 ஆம் தேதி கொச்சியில் துவங்கவிருக்கிறது.