‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இன்று எந்த மொழி திரையுலகமாக இருந்தாலும் சின்ன பட்ஜெட் படங்களை தவிர்த்து மற்ற அனைத்து படப்பிடிப்பு தளங்களிலும் தவறாமல் கேரவன் வாகனம் நிற்பதை பார்க்கமுடியும். சொல்லப்போனால் நடிகர் நடிகைகளின் கவுரவச்சின்னமாகவே மாறிவிட்டது கேரவன்.. ஆடம்பரத்தை விரும்பாத, பட்ஜெட் சிக்கனத்தை கடைபிடிக்கிற மலையாள திரையுலகில் கேரவன் என்கிற சாதனத்தை அறிமுகப்படுத்தியதே மோகன்லால் தான்.. அதற்காக அவர்தான் இந்த ஆடம்பர சாதனத்தை அறிமுகப்படுத்தினார் என அர்த்தமில்லை. 2005ல் அவர் நடித்த 'உடயோன்' படத்தில் தான் கேரவன் என்கிற ஐடியாவே உதித்ததாம்.
அந்தப்படத்தில் மோகன்லால் இரண்டு வேடங்களில் நடித்தார்.. அதில் ஒன்று வயதான கெட்டப் என்பதால் அதற்கான மேக்கப்பிற்கே நீண்ட நேரம் செலவாகியதாம்.. ஆனால் அந்த மேக்கப்புடன் மரத்தடி நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்த மோகன்லாலின் மேக்கப் நேரம் செல்லசெல்ல வியர்வையால் கரைய ஆரம்பித்ததாம். அந்த நேரத்தில் ஓர் வேனில் இருந்த சீட்டை கழட்டி அங்கிருந்த அறை ஒன்றில் போட்டு, அப்படியே மின்விசிறி ஒன்றையும் பொறுத்தி சமாளித்தார்களாம். அப்போதுதான் இந்த கேரவன் வசதி பற்றி தெரியவர, மறுநாளே கேரவனை வரவழைத்து விட்டார்களாம்.
ஆரம்பத்தில் மேக்கப், உடைமாற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கேரவன் பின்னர் நட்சத்திரங்களின் ஈகோவையும் இமேஜையும் சமாளிக்கும் சாதனமாக மாறியது.. ஆனால் இதற்கான வாடகை தொகை அதிகமாக இருந்ததால், இந்த செலவை ஏற்க மலையாள தயாரிப்பாளர் சங்கம் மறுத்துவிட்டதால் இன்றுவரை அதற்கான செலவை சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களே செலுத்தி வருகிறார்களாம். இதனாலேயே முன்னணி நட்சத்திரங்கள் தங்களுக்கென சொந்தமாகவே கேரவன் வாங்கிவிட்டார்களாம்.