'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ஓணம் பண்டிகை ரிலீஸாக கடைசி நேரத்தில் ரேசில் கலந்துகொண்டது மலையாளத்தில் திலீப் நடித்த 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' படம்.. திலீப் ஜோடியாக வேதிகா நடித்துள்ள இந்தப்படத்தை சுந்தர்தாஸ் என்பவர் இயக்கியிருந்தார். பிரபல கதாசிரியரான பென்னி பி.நாரயம்பலம் என்பவர் இந்த படத்தின் கதையை எழுதியிருந்தார். ஜெயில் கைதிகளை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்தப்படம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்க, இப்போது எதிர்பாராத விதமாக இந்தப்படத்தின் கதை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஷிஜு ஜான் என்பவர்தான் இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். கதாசிரியரான ஷிஜு ஜான் இந்தப்படத்தின் கதையை எட்டு வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டாராம்.. அப்போது தனக்கு பழக்கமான இயக்குனர் சுந்தர்தாசிடம் சொல்ல, அவருக்கு கதை பிடித்துப்போய் நடிகர் ஜெயசூர்யாவிடம் சொல்ல வைத்தாராம். ஜெயசூர்யாவுக்கு கதை பிடித்திருந்தாலும் அப்போது அவருக்கு காலில் அடிபட்டு இருந்ததால் ஆக்சன் காட்சிகளில் சரியாக நடிக்க முடியாது என்பதால் ஒதுங்கிக்கொன்டாராம்.. அதன்பிறகு சில வருடங்கள் இப்படியே ஓட, சுந்தர்தாஸ், ஷிஜு ஜானிடமிருந்து கொஞ்ச கொஞ்சமாக விலகிவிட்டாராம்.
ஆனால் திடீரென ஒருநாள் திலீப்பை வைத்து சுந்தர்தாஸ் படம் இயக்குவதாக அறிவிப்பு வர, அப்போது கூட அதை பெரிது படுத்தவில்லையாம் ஷிஜு ஜான். ஆனால் இந்தப்படம் கடந்த வெளியன்று ரிலீஸானதும் முதல் காட்சியாக படத்தை பார்த்த ஷிஜு ஜானுக்கு அதிர்ச்சி.. ஆம் அவர் சொன்ன கதைதான் படமாக உருவாக்கப்பட்டு இருந்தது.. அது தெரியாதபடி சில கேரக்டர் அமைப்புகளும் காட்சிகளும் மாற்றப்பட்டிருந்தாலும் முதல் 20 நிமிட காட்சிகள் அப்படியே ஷிஜு ஜான் சொன்னதுதானாம். இதனால் அப்செட்டான ஷிஜு ஜான், “என்னுடைய கதை எட்டு வருடம் கழித்து படமாக மாறியிருப்பது மகிழ்ச்சி.. ஆனால் சுந்தர்தாஸ் இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணுவார் என நான் நினைக்கவில்லை” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து எந்த புகாரும் கொடுக்கப்போவதில்லை என்றும், தனது அடுத்த ஸ்கிரிப்ட் வேலையை பார்க்கப்போவதாகவும் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார் ஷிஜு ஜான்.