ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் த்ரிஷா பிசியாக நடித்து வந்தபோது தமிழ் சினிமாவில் அவரது கால்சீட் மேனேஜராக அவரது அம்மா உமா கிருஷ்ணனே இருந்தார். ஆனால் தெலுங்கில் கிரிதர் என்பவர் திரிஷாவின் கால்சீட் மேனேஜராக இருந்தார். அவர்தான் த்ரிஷா நடித்த நாயகி படத்தை தயாரித்தார். கோவி என்பவர் இயக்கிய அப்படம் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அப்படத்தின் தமிழ்ப்பதிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதன்காரணமாக, த்ரிஷாவுக்கு நாயகி தயாரிப்பாளர் கிரிதர் பேசியபடி சம்பளத்தை கொடுக்கவில்லையாம். ஒரு சிறிய தொகையை மட்டுமே கொடுத்தவர், தமிழில் படத்தை வெளியிட்டதும் மீதமுள்ள சம்பள பாக்கியை தருவதாக கூறியிருக்கிறாராம். அதனால் அதையடுத்து தான் கதையின் நாயகியாக நடித்து வரும் மோகினி படத்திலும் தனக்கு சம்பளம் தராமல் டீலில் விட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே சம்பளத்தை வாங்கி நடித்துக்கொண்டிருக்கிறாராம் த்ரிஷா.