'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மலையாள நடிகை மித்ரா குரியன். தமிழில் விஜய் நடித்த காவலன் படத்தில் அவரை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்ணாக நடித்திருந்தார். மேலும் கந்தா உள்பட சில படங்களிலும் நடித்தார். மலையாளத்தில் 50 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் நடந்தது.
மித்ரா குரியன் நேற்று முன்தினம் தனது பெற்றோருடன் காரில் திருவனந்தபுரத்திலிருந்து பெரும்பாவூர் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வந்த அரசு பேருந்து ஒன்று மித்ராகுரியனின் விலை உயர்ந்த சொகுசு காரை உரசிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதை துரத்தி பிடிக்க முயன்றுள்ளனர். முடியாததால் மித்ரா குரியன் தனது உறவினர்களுடன் பெரும்பாவூரில் உள்ள அரசு பஸ் டெப்போவிற்கு சென்று அங்குள்ள அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அப்போது மித்ராவை டிரைவர் ராமதாஸ் என்பவர் தரக்குறைவாக பேசியதாகவும், இதனால் மித்ரா அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு தள்ளுமுள்ளு நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து டெப்போ மேலாளர், மித்ரா குரியனும், அவரது உறவினர்களும் டெப்போவுக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து மித்ரா குரியன் கூறும்போது... "காரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற பஸ் டிரைவர் மீது புகார் அளிக்கவே டேப்போவுக்கு சென்றோம். ஆனால் எங்கள் புகாரை வாங்காமல் எங்கள் கார்சாவியை வாங்கி வைத்துக் கொண்டு தரமறுத்தார்கள், அதனால் நான்தான் போலீசை வரவழைத்தேன். போலீஸ் வந்து கார் சாவியை வாங்கிக் கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்து வந்துவிட்டோம். இதுதான் நடந்தது" என்கிறார் மித்ரா குரியன்.