‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஸ்ரீதர் இயக்கிய தென்றலே என்னை தொடு படத்தில் துள்ளும் இளமையுடன் அறிமுகமானவர் ஜெயஸ்ரீ. அதன் பிறகு விடிஞ்சா கல்யாணம், திருமதி ஒரு வெகுதி, வண்ண வண்ண கனவுகள், தாலிதானம், நாளைய மனிதன், பிஸ்தா உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1997ல் ராமராஜனுடன் நடித்த விவசாயி மகன் தான் இவரது கடைசி படம். முன்பே திருமணம் செய்து கொண்ட ஜெயஸ்ரீ குடும்ப வாழ்க்கைக்கு திரும்பி விட்டார். இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஜெயஸ்ரீ மணல் கயிறு இரண்டாம் பாகம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் அவர் எஸ்.வி.சேகரின் மனைவியாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் சாந்தி கிருஷ்ணா நடித்த கேரக்டரில் ஜெயஸ்ரீ நடிக்கிறார். இதற்கு முன்பு பல படங்களில் ஜெயஸ்ரீ பல படங்களில் நடித்தாலும் அவர் நடிக்கும் முழுநீள காமெடி படம் இதுதான். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இப்போது ஹீரோயின்களுக்கு ஈடாக அம்மா நடிகைகளுக்கும் அதிக போட்டி இருக்கிறது. அந்த போட்டியில் ஜெயஸ்ரீயும் குதிக்கிறார்.