600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் எதை நோக்கி. 320டிகிரி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. நிதின் சாம்சன், டாமி என்ற புதுமுகங்களுடன் லிவிங்ஸ்டன், சுவாமிநாதன், காயத்ரி, லாவண்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.ஜதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.சி.அனில் இசை அமைக்கிறார். ஹீரோ நிதின் சாம்சன் தான் படத்தை இயக்குகிறார்.
"காட்டுக்குள் விலங்குகளை புகைப்படம் எடுக்கச் செல்லும் ஒரு போட்டோகிராபரும், சுற்றுலா வந்து வழிதவறிய ஒரு பெண்ணும் சந்தித்துக் கொள்கிறார்கள். காட்டிலிருந்து தப்பிக்க போராடும் அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அதே அடர்ந்த காட்டுக்குள் இன்னும் சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் கொடூரமானவர்கள். இவர்களுக்குள் நடக்கும் விஷயங்கள்தான் கதை. முதுமலை, மசனக்குடி, கூடலூர் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கி உள்ளோம்" என்கிறார் இயக்குனர் நிதின் சாம்சன்.