ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்து 1951ம் ஆண்டு வெளிவந்த படம் மர்மயோகி. எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, பண்டரிபாய், எம்.என்.நம்பியார், ஜாவர் சீத்தாராமன், எஸ்.வி.சகஸ்ரநாமம் உள்பட பலர் நடித்திருந்தனர். கே.ராம்நாத் இயக்கி இருந்தார், சி.ஆர்.சுப்பிரமணியமும், எஸ்.எம்.சுப்பையா நாயுடும் இசை அமைத்திருந்தனர்.
நாட்டின் மன்னனை தன் கை பாவையாக வைத்துக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறாள் மன்னனின் ஆசை நாயகி. இளவரசன் கரிகாலன் நாடு கடத்தப்படுகிறான். கரிகாலன் மக்களை திரட்டி நாட்டை மீட்க போராடுகிறான். இதற்கிடையில் மர்மயோகி என்ற ஒரு உருவம் ஆட்சியை எதிர்த்து போராடுகிறது. இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.
இந்தப் படம்தான் முதல் ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படம். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட தணிக்கை குழு, இந்த சான்றிதழை வழங்கியது. மர்மயோகியாக நடித்திருப்பவர் பல காட்சிகளில் ஆவியாக வந்து எல்லோரையும் மிரட்டுவார். இந்த காட்சியை சிறுவர்கள் பார்க்க நேர்ந்தால் அவர்கள் பயந்து நடுங்குவார்கள். இதனால் அவர்களுக்கு மனரீதியான பிரச்னை ஏற்படும் என்று கூறி ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். அடல்ட்ஸ் ஒன்லி என்ற வாக்கியத்துடன் விளம்பரம் செய்யப்பட்ட முதல் படம் மர்மயோகிதான்.